எட்டு வயசு பையன இப்படியா கொடுமைபடுத்துவது.???
வேலைய முடிச்சிட்டு உக்காந்திருக்கிற நேரத்துல நம்ம முன்னாடி இருக்கிறது நம்ம கம்ப்யூட்டர் தான். நான் அதிகமா யூஸ் பண்றது ஆர்குட், பேஸ்புக், டிவிட்டர் அப்பரம் ப்ளாக்.. கண்டமேனிக்கு மானாவாரியா மாத்தி மாத்தி சாட்டிங், டிவிட்டிங், ப்ளாங்கிங்னு போற சமயத்துல தோழி தமிழச்சியோட பேஸ்புக் அப்டேட்ஸ்ல இந்த கொடுமைய பாத்தன்.. மனசு ரொம்ப வலிக்கிது..
இந்த விசயம் 2005ல நடந்ததா இருந்தாலும் இப்ப தான் எனக்கு தெரிஞ்சிது.. அது என்னனா எட்டு வயசு பையன் கையில கார ஏத்துனது தான்.. அதுவும் எதுக்கு தெரியுமா.??? பசியால பையன் ப்ரட்ட திருடிட்டானாம், இனி அப்படியொரு விசயம் பண்ணகூடாதுன்னு அதிபுத்திசாலிகள் தங்கள் மூளையை தட்டி யோசித்து இப்படியொரு காரியத்தை செய்துள்ளனர்..
பிஞ்சு முகத்தினை கண்டிட்டேனடா தோழா.!!
அதன் மழலை மறையுமுன்னே
அவனை மங்கசெய்திட்டாரே.!!
பசிக்கொடுமை பெரியதா.?
இங்கு நடந்திடும் கொடுமை பெரியதா.?
மனசு பொருக்கதில்லையே மானிடா
பொங்கி எழுந்திடடா..
பிஞ்சு பருவத்திலே,
அவன் வாழ்வில் நஞ்சை கலந்திட்டானடா..
நீ காணும் கோடானகோடி இன்பம்
இவன் வாழ்வில் கொஞ்சிட மறுத்ததேனடா.?
இன்னும் கொதிக்குதே கைகள்..
என்ன செய்ய என் வரிகள் முடியவில்லையே.!!!
இது நடந்தது ஈரான்ல.. அந்த பயலுகள பாத்து கேக்குறன் பையன கொடுமை படுத்துர இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டா போச்சா? இதுக்கு பெயர் தண்டனையா.?
இப்படியெல்லாம் என் மனசுல பெரிய பெரிய கோபம் வந்தது.. ஆனா ஒரு நிமிசம் நிதானமா யோசிச்சு பாத்தன்.. மனிதர்கள் இப்படி செய்வார்களா.? அப்படியே செய்தாலும் ஒருவர் புகைபடம் எடுக்க அனுமதிப்பார்களா.?
இதுல முதல் படத்த பாத்தீங்கன்னா அந்த பக்கத்துல இருக்கிறவர் மைக் கையில வச்சிருக்கார்.. அந்த பையனோட கைக்கு கீழ போர்வை இருக்கு.. தண்டன கொடுக்கிறவங்க போர்வை போத்தி நல்ல பாதுகாப்பாவா தண்டனை கொடுப்பாங்க.?
அப்படினா இது அந்த பையனோட சாதனையா இருக்குமோ.?? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.. அப்படி இது சாதனையாகவே இருந்தால் இது மாதிரி தப்பா போடுற தளத்தில இருந்து ஜாக்கிரதையா இருங்க..
அந்த தளம் எதுன்னு பாக்குறீங்களா.. http://www.lindasog.com/archives/2005/11/know_your_enemy.html
நம்ம தமிழச்சி தளம்..
டிஸ்கி: நாங்க இன்வஸ்டிகேட் பண்ணுவோம்ல.. விஜயகாந்த் ரசிகர்னு ப்ரூவ் பண்ணிட்டோம்ல..
பாஸ் ரொம்ப குழப்பறீங்க.....
ReplyDelete@பாரி;முதல்ல உங்களோட முதல் கருத்த பதிவு செஞ்சதுக்கு கைய கொடுங்க.. அப்பரம் கொழம்புன உங்கள தெளிவுபடுத்துறது என் வேலை.. தமிழச்சினு ஒரு தோழி ஒரு லிங்க் போட்டிருந்தாங்க.. அத பாத்தப்போ அதுல ஒரு 8 வயசு பையன் கைல கார் ஏத்தி தண்டனை கொடுத்ததா இருந்துச்சு.. முதல்ல பயங்கர கோபம்,ஆத்திரம் வந்துச்சு.. அப்பரம் யோசிச்சு பாத்து பதிவுல ஒரு சில கேள்வி கேட்டிருந்தன்.. அது அந்த பையனோட சாதனையா இருக்குமோன்னு ஒரு டவுட்டு..? இதுதான் மேட்டர்.. வேற ஒண்ணுமேயில்ல.. நடுவுல கோபத்துல சரளமா வந்த வரிகள எழுதினன்.. இப்ப ஏதாச்சும் புரியுதா.?? இல்ல இப்பவும் குழப்பமா தான் இருக்கா..???
ReplyDeleteஎனக்கு தெரிந்தவரையிலும் அது சாதனைதான்
ReplyDeleteசுத்தி வேடிக்கை பாக்குறவங்க ஒருத்தருக்கு கூடவா மனசுல ஈரம் இல்லாமல் போகும். இது அந்த சிறுவனின் சாதனை தான்
ReplyDelete@அப்துல்:நானும் அப்படியே நினைக்கிறேன்..
ReplyDelete@மூர்த்தி; கண்டிப்பாக அப்படியாக தான் இருக்கும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteஒன்னும் புரியலை மறுபடியும் பார்க்கிறேன்.
ReplyDeleteதாங்கள் என்று புத்தக கண்காட்சி வருகிறீர்கள். தெரியப் படுத்தவும்
ReplyDelete@எல்.கே: இதில் கருத்தை சரிவர நான் பதிவுசெய்யவில்லை என நினைக்கிறேன்.. இனி திருத்திகொள்கிறேன்..இதுவரை மூன்று முறை இப்புத்தக கண்காட்சிக்கு சென்று வந்துவிட்டேன்.. இருப்பினும் பொங்கல் மற்றும் பத்திரிக்கை பணி வேலைகள் இன்னும் மித்தம் அதிகமாக இருப்பதால் 16ம் தேதி மீண்டும் செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன்.. இம்முறை பதிவுலக நண்பர்களை முடிந்தவரையில் அழைப்பேன்.. கண்டிப்பாக உங்களையும் அழைப்பேன்.. மறுப்பு கூறாமல் வருவீ(வா)ர்கள் என நம்புகிறேன்..
ReplyDeleteஎனக்கும் இது சாதனை அல்லது..ஏதோ சினிமா ஷூட்டிங் மாதிரி கூட தெரியுது கூர்மதி...சாதனை நாள் அந்த பையன் என்ஜாய் பண்ணி செய்வான்...இது ஏதோ ஷூட்டிங் மாதிரி எனக்கு தோணுது...
ReplyDelete@ஆனந்தி: வாங்க வாங்க.. இது ஷீட்டிங்கா இருந்தா இத சொல்லிபுட்டு அந்த மைக் புடிச்ச மகராசன் ஓடியிருப்பான்.. ஆனா அவன் அவன் பக்கத்துலேயே நிக்கிறான் பாருங்க.. நீங்க சொல்றமாதிரி சாதனைய என்ஜாய் பண்ணி பண்ணனும்னா அது சாப்புடுற சாதனையா இருந்தா சரி.. இது அப்படியா..??? கார கையில ஏத்தும்போது என்ஜாய்.??? ஐயோ.!! காமெடிங்க நீங்க...
ReplyDeleteஉண்மை தான் கூர்மதி...இப்பவும் ஒரு வாட்டி பார்த்தேன்..சாதனையா இருக்கலாம்..ஆனால் கராட்டே சாதனை எல்லாம் பார்த்துருக்கேன்..இவளவு செட் up பண்ணி..மைக் இல் ஆளு பக்கத்துலையே கைட் பண்ணி சொல்றமாதிரி பார்க்கல..ம்ம்...இன்னும் கொஞ்சம் குழப்பம் தான்...என்னனு உங்களுக்கு சரியா தெரிஞ்ச பிறகு சொல்லுங்க..ஆனால் இது கட்டாயமா தண்டனை எல்லாம் இல்லை...:)) நன்றி பாஸ்..:)))
ReplyDelete@ஆனந்தி: நன்றி தோழி.. தெரிஞ்சா கண்டிப்பா சொல்றன்..
ReplyDeleteதெரிஞ்சா கண்டிப்பா சொல்றன்."
ReplyDeleteசீக்கிரம் சொல்லுங்க
@பார்வையாளன்:
ReplyDelete//சீக்கிரம் சொல்லுங்க//
சொல்றன்.. சொல்றன்.. தெரிந்தால் கண்டிப்பாக சொல்வான் இந்த தம்பி..
எல்லோருக்கும் ஒரு சந்தோசமான விசயம்.. முதல்ல ஆனந்தி என்னை மன்னிக்கனும்.. ஆனந்தி மேடம் ஆனந்தி மேடம் இது ஷுட்டிங் தாங்கோ.. "Maareke giry"ன்டு அவுக நாட்டுல ஒரு டிவி ப்ரோக்ராமு.. அதாவது தெரு மேஜிக்.. பசியால வாடுற இந்த பையன் காசுக்காக வேண்டி இதுல கலந்துகிட்டான்.. பையன் கைக்கு ஒண்ணும் ஆகல.. இந்த ப்ரோக்ரம எடுத்தவர் இத அவர் நண்பருக்கு மெயில் அனுப்ப, அவர் கீழே கொடுத்திருந்த கேப்ஷனை தவறாக புரிந்து கொண்ட நண்பர் அதை தண்டனை என மெயில் பண்ணிவிட்டார்.. இதாங்கோ நடந்தது.. இது தண்டனை இல்ல.. ஷுட்டிங்கோ.. எல்லாரும் கேட்டுகிட்டீங்களா.. இது ஜுட்டிங்..
ReplyDeleteதெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி
ReplyDeleteஞாயிறு கஷ்டம் தம்பி. அது குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட நாள்
ReplyDelete//ஷுட்டிங்கோ.. எல்லாரும் கேட்டுகிட்டீங்களா.. இது ஜுட்டிங்..//
ReplyDeleteசரிங்கோ
@பார்வையாளன்: அது என் கடமை..
ReplyDelete@எல்.கே.: ஓ.. குடும்பத்துக்காக ஒதுக்கப்பட்ட நாளில் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. ஆனால் புத்தக பொங்கல் அன்று கூட என்னை ஒரு கிராமத்துக்கு போக சொல்லி ஆபிஸ்ல சொல்லிட்டாங்க.. டைட் ஆ இருக்கு.. முடிந்த வரையில் நேரம் பார்க்கிறேன்...
ReplyDeleteஅநியாயம்..அரக்கர் ஆளும் தேசமா அது..??
ReplyDelete@சிவக்குமார்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நீங்கள் கொஞ்சம் கமெண்டுகளையும் படித்தால் இன்னும் உண்மைகள் விளங்கும்..
ReplyDeleteசிறுவனின் முகம் வன்செயலின் வலியை உணர்த்துவதாகவே உள்ளது நண்பரே..தத்ரூபமான நடிப்பு!!
ReplyDelete@சிவக்குமார்: இருக்கலாம்.. எனினும் உங்களுக்கு வந்த கோபம் இதை கண்டவுடன் எனக்கும் வந்தது.. உண்மை தெரிந்தவுடன் சிரித்துகொண்டேன்...
ReplyDeleteஓகே..ஓகே...ம்ம்...சொன்னால் ஒத்துகிறது இல்ல..ஆயிரம் வியாக்கியானம்..:))))))
ReplyDelete@ஆனந்தி:சரண்டர்...
ReplyDelete