அந்த ‘பார்க் பெஞ்சில்’ அவன்... (3)
என்ன ஒரு வார்த்தை சொல்லிட்டாள் அவள்.!!!
அதிர்ந்து போன அவன் வார்த்தைகளில் அயர்ந்துபோயிருந்தவள் ஆர்பரிப்பு ஏதுமின்றி எழுந்து உட்கார்ந்தாள்.. முன்னால் படர்ந்திருந்து பின்னால் ஒடுங்கியிருந்த தலைமுடியை இழுத்து கொண்டையாக போட்டுகொண்டு கைகளின் விரல்நுனி கண்களை சீண்ட தெளிவாக விழித்த அந்த முட்டை கண்களில் கருவிழியில் அவனது உருவம் தெளிவுபட தெரிந்தது..
முகத்தில் ஆயிரம் சந்தோசங்கள் கூட வாயிலிருந்து வார்த்தைகள் தட்டுபட,
‘‘ஏய்.!! நீ.. நீ.. நான் இத எதிர்பார்க்கல டா’’
‘‘ஏன் இங்க வந்து இப்படி படுத்திருக்கே.!! தாத்தா எங்க.?’’
என கேள்விகளை தொடங்கினான்..
‘‘அங்க எனக்கு இருக்க பிடிக்கல அதான் இங்கேயே வந்துட்டன்.. தாத்தா ‘காந்தி தெருவுல’ ஒரு வீட்ல இருக்கார்.. நமக்கு இந்த பார்க் பெஞ்ச் தானே அம்மா அதான் இங்க வந்து கொஞ்ச உக்காந்தன் அப்படியே படுத்து தூங்கிட்டன்..’’
என கேள்விக்கு பதிலாய் அமைதியாக கூறியவள் தள்ளி நிற்பவனை உட்கார கட்டளையாக சொன்னாள்.. அருகில் நெருங்கி அமர்ந்தவன் அக்கால பேச்சுகளில் ஈடுபட்டான்..
அன்று,
அவள் இவனின் ஒன்பதாம் வகுப்பில் அறிமுகமானாள்.. அவன் என்றும் விரும்பிடாத அந்த கோவிலுள்ளே நண்பர்களின் படைசூழ தான் அவளை முதலில் கண்டான்.. வெட்டி பேச்சு, ‘சைட்’ அடிப்பது போன்ற இனிய பழக்கங்கள் அனைத்திற்கும் மிகவும் உரித்தான அவன் அன்றும் அவனது இனிய பழக்கத்தில் திளைத்திருந்தான். சிகப்பு நிற தாவணியில் சீவி பின்னப்பட்ட தலைமுடிகள், ஆயிரம் கதைகள் பேசும் முட்டை விழிகள், அளவுக்கு மீறாத உயரம், சிரிக்கையில் வெளிதெரியும் அந்த சிங்கபல் மீது கூடுதல் பல் அனைத்திலும் அவன் மனம் விரும்பும்படி அவளின் அழகு.. பார்த்த அடுத்த நொடியே அவளது அழகில் மயங்கிருந்தவன், எங்கும் எதிலும் தயங்காதவன் அவளிடம் ஒருவார்த்தை பேச தயங்கியிருந்தான். கூடியிருந்த நண்பர் பட்டாளம் இது காதல் என்னும் நோய் என உள்ளுக்குள் புகைந்திடும் மனதின் இறையாய் அவளை அள்ளிபோட்டனர்.. அழகில் மயங்கியவன் காதலாக மாறியதா என்னும் சிந்தையில் இருக்கையில் அவளாக இவனிடம் வந்து பேசினாள்..
‘‘நான் உங்க எதிர்வீட்ல தான் இருக்கேன்.. உங்கள நேத்தி எங்க வீட்டு மாடியிலயிருந்த பாத்தேன்.. அப்பாகூட சண்ட போட்டுகிட்டிருந்தீங்க போல.. பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க உங்களுக்கு அம்மா இல்லனு.. நானும் அப்படிதான்.. அம்மா இல்லைனா வருத்தம் இருக்கசெய்யும், அம்மா இருந்திருந்தா அப்பாகூட இப்படி சண்ட போட்டிருக்கமாட்டீங்க.. உங்களுக்காவது அப்பா இருக்காங்க எனக்கு அப்பா அம்மா யாருமில்ல அந்த வலி எனக்கு தெரியும்.. உங்க வலியும் எனக்கு புரிஞ்சிது.. ஏதோ சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டன்.. நாம இனி நண்பர்கள் ஓகே வா..’’
என அவளின் நீண்ட பேச்சின் முடிவேஅவளின் வருத்தத்தை புரிந்து கொண்டு மங்கிய குரலில் தனது சம்மதத்தையும் சொன்னான்.. பின் அவளோடு அடிக்கடி பேச்சுகள் தொடர, வீட்டினில் சண்டைகள் குறைய அவன் இதுவரையிருந்த வாழ்க்கையிலிருந்து மாறுபட்டான்.. மனதிலிருக்கும் எண்ணத்தை தெளிவுபடுத்தி வெளிகாட்டும் இவள் அவன் வாழ்வின் காதலி அல்ல என்றும் உயிருக்குயிரான தோழிதான் என தன்னுள் ஏற்பட்ட, நண்பர்கள் விளைவித்த சஞ்சலத்தை விட்டெறிந்தான்.. தாத்தாவின் சொந்த வீட்டை விட்டு முப்பது வருடத்துக்கு முன்னர் சென்று இப்போ மீண்டும் திரும்பியுள்ளது முதல் தனது ஒன்பதாம் வகுப்பு படிப்பு, குடும்பத்தின் இழப்பு, எதிர்கால லட்சியம் என அனைத்தையும் பகிர்ந்தாள்.. அடிக்கடி அவர்களின் கூட்டுபேச்சு அமைவது அந்த பார்க் பெஞ்சில்.. இருவருடம் முன்பு தாத்தாவின் சிகிச்சைக்காக சொந்த வீட்டை விற்றுவிட்டு பெங்களூரு கிளம்பியவள் சிகிச்சைக்கு பின்னும் அங்கேயே தங்குவதாக கடிதம் போட்டுவிட்டு இன்றுதான் அவனது கண்களுக்கு தெரியவருகிறாள்.
முந்தைய காலத்தின் நினைவுகளை பற்றி பேச்சுகள் தொடர்ந்த இருவரும் பேச்சுகளின் இடையே பிரிந்திருந்த வருடங்களில் தனது வாழ்வின் முன்னேற்றத்தையும், தனது வாழ்க்கையில் இன்று கிடைத்த சந்தோசத்தையும் அவளிடம் கூறி மகிழ்ந்தான்.
பார்த்த சந்தோசத்தில் அவளின் தற்போது நிலையை கேட்க மறந்தவனாய்.. தாத்தாவின் உடல் நிலையை பற்றியும், என்ன வேலையில் ஈடுபட்டிருக்கிறாள் எனவும் வினவ தொடங்கினான்..
தாத்தாவின் உடல்நிலை தற்ப்போது கூடிவருவதை பற்றி விளக்கியவள் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி அவளை விட்டு இந்த நிமிடமே விலகிடலாமா.? என எண்ண செய்தது..
முதல் ஆளா படிக்கிறோன்..
ReplyDeleteஅருமை தொடருங்கள்..
ReplyDeleteவாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..
அருமை. தொடருங்கள்.
ReplyDeleteஃஃஃஃஃஃசிகப்பு நிற தாவணியில் சீவி பின்னப்பட்ட தலைமுடிகள், ஆயிரம் கதைகள் பேசும் முட்டை விழிகள், அளவுக்கு மீறாத உயரம், சிரிக்கையில் வெளிதெரியும் அந்த சிங்கபல் மீது கூடுதல் பல் அனைத்திலும் அவன் மனம் விரும்பும்படி அவளின் அழகுஃஃஃஃஃ
ReplyDeleteநல்லாயிருக்குங்க அதிலும இந்த வர்ணிப்பு ரொம்பவே நல்லாயிருக்கு...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
ஒன்பதாம் வகுப்பிலேயே என்னென்ன வேலையெல்லாம் பண்ணியிருக்கு பாரு...
ReplyDeleteகூர்...தொடர்ந்து படிச்சிட்டு வரேன்...விறுவிறுப்பாய் போகுது...அடுத்த பகுதி போடுங்க சீக்கிரம்..அப்புறம் கவிதை ப்ளீஸ்...
ReplyDeleteபோடு முத வெட்டை
ReplyDeleteஏன் ஃபோட்டோ எல்லாம் பிளாக் & ஒயிட்டா இருக்கு?
ReplyDeleteமுத வெட்டு கமெண்ட் வாபஸ்
ReplyDeleteம் ம் இப்போதான் கதை சூடு பிடிக்குது
ReplyDeleteவந்துட்டேன்....
ReplyDeleteஅருமையாக போகிறது. தொடர்ந்து வாங்க நண்பா...
ReplyDelete@சௌந்தர்:
ReplyDelete//முதல் ஆளா படிக்கிறோன்..//
ஆமாங்க..
//அருமை தொடருங்கள்..
வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்.//
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..
@சித்ரா:
ReplyDelete//அருமை தொடருங்கள்.//
நன்றி தோழி.!!
@ம.தி: தேங்க்ஸ் பாஸ்..
ReplyDelete@பிரபா:நீங்க பண்ணாததா பிரபா.!!
ReplyDelete@ஆனந்தி: தொடர்ந்து படிப்பதற்கு நன்றி ஆனந்தி..!!! கவிதைகள் சீக்கிரமே.!!! (என்னயும் நம்பி கவிதயெல்லாம் கேக்குறாங்கப்பா.!!)
ReplyDelete@சி.பி:
ReplyDelete//போடு முத வெட்டை//
ஹி ஹி..
//ஏன் ஃபோட்டோ எல்லாம் பிளாக் & ஒயிட்டா இருக்கு?//
வாழ்க்கையில் எல்லா மனிதரும் கருப்பு வெள்ளை கோடுகளில் அகப்பட்ட ஒற்றை போராளி தானே.!! எப்புடீ.???
//முத வெட்டு கமெண்ட் வாபஸ்//
புத்திசாலித்தனமான முடிவு.!!
//ம் ம் இப்போதான் கதை சூடு பிடிக்குது//
அய்யய்யோ பாஸ்.. கதை முடிஞ்சிடுச்சு..
@மனோ:நன்றி பாஸ்.!!
ReplyDelete@கருண்:நன்றி நண்பரே.!! தொடர்கிறேன் தொடர்ந்து வாங்க..
ReplyDeleteஇன்னைக்கு தான் உங்க பக்கத்துக்கு வந்தேன்.. சுப்பரா கதை போய்க்கிட்டு இருக்கு போல...
ReplyDeleteவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
@ப்ரகாஷ்:சூப்பரா கதை போகுதா இல்லையானு நீங்க தான் சொல்லணும்.!! விபரங்களுக்கு சுட்டியை பாத்தாச்சு.. விவரமும் பெற்றாச்சு.. கேள்வி தானே கேட்டுடுவோம்..
ReplyDelete